அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 6 arrow அவர்கள் கரையிலேயே நிற்கிறார்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அவர்கள் கரையிலேயே நிற்கிறார்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தா.பாலகணேசன்  
Tuesday, 01 June 2004

மரத்தில் செதுக்கிய வள்ளம்
துடுப்பை வலித்த படி போகிறது
நிழலாய் அசையும்
அவள் காதலனின் உருவை
கண்களில் ஒற்றி
மெல்ல இமைக் கதவுகளை
திறந்து வைத்தாள்
உள்ளும் வெளியும் ஒன்றென விரிய

நீலக் கருவசையும்
கோளப் பெரு முட்டையுள் அவள்
ஆழப் பரந்து பாய் விரித்தாள்
மோனக் கிறுக்கேறி
ஆழி ஆர்த்தெழுகிறது
விண்ணை முட்டும் காதலின் தீரம்
மிக மிகக் கொண்டு

வையக் கரையில் வந்து மோதி,
வீழ்ந்து மீளத் தன்னுடல் கரைத்து
ஆழ்கிறது ஆழி

அவள் சேலை
காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது

மாலைக் கதிர்க் கீற்றுக்கள்
முகத்தில் படரும் பேரழகாள்
பிரிவெனும் பெரும் துயருள்
பனிபோலும் உருகித் தகித்தாள்

ஆனந்தமயப் பொழுதிற்காக
அவள் கரையிலேயே காத்து நின்றாள்

அவன் வள்ளம் நிறைய
ஆழியின் சங்கீதத்தை பொழியும் சங்குகளோடு
கரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்
அவர்களோ
கிழிஞ்சல்களையும் சிப்பிகளையுமே
சேகரித்துக் கொண்டு
கரையிலேயே நிற்கிறார்கள்

14.10.03


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 20:09
TamilNet
HASH(0x555891d45038)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 20:09